கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரதமர் மோடியை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் பகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர் சாலையில் ஒன்று கூடி பிரதமர் மோடியின் புகைப்படத்தை அவமதித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பாஜக மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை நிறுத்தினர்.
















