இந்தியாவின் AI புரட்சியில் மற்றுமொரு மைல்கல்லாக மும்பையைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் உருவாக்கியுள்ள புதிய ஏஐ தளம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
மும்பையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜீத் சந்தோஷ் பாஸ்கர், Bronto AI என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் அவரது தந்தை வாங்கித் தந்த மேக்புக் மூலம், இணையவழி வகுப்புகளைப் பார்த்துத் தானாகவே கோடிங் கற்றுக்கொண்டு இந்தத் தளத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.
மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு சூழலுக்கு ஏற்ப உரையாடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 மாத கடின உழைப்பிற்குப் பிறகு பிறந்த இந்தத் தளம், ஆப்பிள் நிறுவனத்தின் கடுமையான தொழில்நுட்ப ஆய்வுகளைக் கடந்து தற்போது Apple App Store-ல் அதிகாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.
மாணவர் ஜீத், இதற்கு முன்பே ‘MSP Connect’ என்ற தளத்தை உருவாக்கி, மகாராஷ்டிர மாநில விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாகவே இந்த ‘BrontoAI’ பிறந்துள்ளது. தற்போது 175 நாடுகளில் இந்த AI பயன்பாட்டிற்கு வந்துள்ளது…
















