போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக ஈரானில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசெண்ட் அமைப்பு அறிவித்துள்ளது.
இதனிடையே ஈரான் தங்களுடன் பேச தயாராக இருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் ட்போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த மதகுரு அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கமேனியின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்க தளங்களை தாக்கி வரும் ஈரானுக்கு, அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழிவாங்கும் நடவடிக்கையை விடுத்து ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை மற்றும் போலீசார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
போரை நிறுத்த மறுத்தால், மரணத்தை சந்திக்கத் தயாராகுங்கள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
















