நாங்குநேரில் கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களை அரிவாளால் தாக்கி உள்ளதாகவும், தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியங்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் 48 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
ஒரு டிஜிபியை கூட போட முடியாத குடும்பத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல விடியல் கிடைக்கும் எனவும் கூறினார்.
மேலும், பிரதமர் மோடி, இபிஎஸ் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் வரும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















