துபாயில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அபுதாபியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஆகும் கூடுதல் செலவை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்குப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் விமான சேவை தடைபட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் தொழில் நிமித்தம் துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் நிலையில், போர்ச்சூழ்நிலை காரணமாக பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் தங்குவதற்கான நடவடிக்கையை அபுதாபி சுற்றுலாத்துறை ஏற்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தினர்கள், குறிப்பிட்ட நாளில் சொந்த நாட்டுக்கு கிளம்ப முடியாத நிலை ஏற்பட்டால், முன்பதிவு செய்துள்ள நாட்களையும் தாண்டி அவர்களை அதே அறையில் தங்க வைக்க வேண்டும் என்றும், அதற்கு ஆகும் செலவை அபுதாபி அரசு ஏற்றுக் கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.
















