தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் சென்றபோது, த.வெ.க தொண்டர்கள் சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்டு, பின்தொடர்ந்து பைக்கில் சென்றதால், தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர்.
தஞ்சையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக, கூட்டம் நடந்த செங்கிப்பட்டிக்கு வேனில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விஜய்யை பார்க்க வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள் திரண்டிருந்தனர். சில தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் விஜய்யின் வாகனத்தை பைக்கில் விரட்டிச் சென்றனர்.
விஜய் வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு, ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மதிக்காமலும் ஆபத்தான முறையில் பைக்கில் த.வெ.க தொண்டர்கள் பலர் பின்தொடர்ந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது.
இதில் பலர் காயமடைந்த நிலையில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
















