சேலத்தில் வடமாநிலத்தவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் வசந்த விழா எனும் ஹோலி பண்டிகை கோலாலமாக கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊருக்கு செல்ல முடியாததால் சேலம் செவ்வாய்பேட்டை, நாராயண நகர், சங்கர் நகர், பள்ளப்பட்டி, பச்சப்பட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் பாகுபாடின்றி வண்ணப் பொடிகளை தூவியும், ஒருவருக்கொருவர் பூசிக்கொண்டும் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இனிப்பு பலகாரங்கள், பாதாம் பால் உள்ளிட்ட குளிர்பானங்களை ஒருவருக்கொருவர் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல் ஈரோட்டில் வசிக்கும் வடமாநில மக்களும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். சிறுவர்களும், பெரியவர்களும் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















