விழுந்து நொறுங்கிய Su-30MKI விமானம் - சீனாவின் ரேடார் சிக்னல் காரணமா? என விசாரணை
Mar 15, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விழுந்து நொறுங்கிய Su-30MKI விமானம் – சீனாவின் ரேடார் சிக்னல் காரணமா? என விசாரணை

Manikandan by Manikandan
Mar 6, 2026, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாயமான Su-30MKI போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ? விபத்துக்கு காரணம் என்ன?

ரஷ்யாவின் சுகோய், இரட்டை இருக்கைகள் கொண்ட பல்திறன் கொண்ட போர் விமானம் ஆகும். நீண்ட தூர தாக்குதல்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன போர் விமானங்கள் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிரமோஸ் ஏவுகணைகளை எடுத்துச் சென்று தாக்கும் திறன் கொண்டவையாகும்.

ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட Su-30MKI போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் முக்கிய அங்கமாக உள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் முதுகெலும்பாக உள்ளது.

முதன்முதலில் 1997-ல் முதன்முதலாக ரஷ்யா இந்தியாவுக்கு சுகோய் போர் விமானங்களை வழங்கியது. தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்த சுகோய் போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட சுகோய்-30 போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

சூப்பர் சோனிக் ரக தொழில்நுட்பத்தில் இயங்கும் சுகோய் ரக விமானங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதே இந்த சுகோய் போர் விமானத்தின் சிறப்பம்சமாகும்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் விமானப் படை தளத்தில் இருந்து கிளம்பி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

கா்பி அங்லோங் மாவட்ட வான்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, ஜோர்ஹட் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு திடீரென துண்டிக்கப்பட்டது. சுகோய்-30 போர் விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது.

இந்நிலையில் கர்பி அங்லோங்கில் உள்ள மலைப் பாங்கான வனப்பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போா் விமானத்தைத் தேடும் முயற்சி உடனடியாகத் தொடங்கப்பட்டது.

ஜோர்ஹட்டிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி அங்லாங் பகுதியில் இந்த சுகோய் போர் விமானம் விபத்துகுள்ளானதாகவும் விபத்தில் படுகாயமடைந்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் ஃப்ளிட் லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகியோர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம், சர்ச்சைக்குரிய இந்திய – சீன எல்லை பகுதியில்தான் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது.

இந்த வடகிழக்கு எல்லையருகே சீனாவின் விமானப்படை தளமும் உள்ளதால், சுகோய் போர் விமான விபத்துக்குச் சீனாவின் தந்திரம் காரணமா? என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக சீனாவின் விமானப்படை தளத்தில் இருந்து வந்த ரேடார் சிக்னல்கள், சுகோய் – 30 போர் விமானத்தை தவறாக வழிநடத்தியதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: missing Su-30MKI fighter jetIndian Air Forceboardtwo pilotsconfirmedCrashed Su-30MKI aircraft
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரில் சர்வதேச பின்னலாடை இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி!

Next Post

அமெரிக்க போர் விமானங்கள் வாங்க ஆர்வமே காட்டாத இந்தியா – காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies