சேலம் மாவட்டம் ஏற்காட்டில், தனது மகன் தற்கொலை முயற்சி வழக்கில், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எஸ்.பி. அலுவலகத்தில் தாயார் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு முருகன் நகரை சேர்ந்த ஜெயந்தி என்பவரது மகன் தமிழரசு, வேற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், மனைவி சாதி ரீதியாக திட்டுவதாகக்கூறி தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
இதற்கு காரணமான மருமகள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த போதிலும், மேல்நடவடிக்கை எடுக்கவில்லை என ஜெயந்தி புகார் தெரிவித்துள்ளார்.
















