சேலம் மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதை கூட அளிக்காததால் அதிமுகவில் இணைந்துள்ளதாக முன்னாள் எம்எல்ஏ தமிழரசு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவான தமிழரசு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாமகவில் இருந்து திமுகவில் இணைந்தார்.
இவருக்கும், அமைச்சர் ராஜேந்திரனுக்கும் இடையே நீடித்த பனிப்போர் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஏழு ஆண்டுகளாக தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதையை கூ திமுகவினர் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
சேலம் மாவட்ட திமுகவில் பிரிவினை இருப்பது உண்மை எனக்கூறிய அவர், அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற களப்பணியாற்றுவேன் எனவும் தமிழரசு தெரிவித்தார்.
















