சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட ஆபாச நடனம், காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், தாரமங்கலம் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவில் காவல்துறையினரின் மாமூல் வேட்டையுடன் ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பான ஆபாச பாடல்களின் சத்ததால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளானதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், ஆபாச நடன நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட காவல்துறை தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















