தவெகவுடன் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்ங
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த நிர்வாகி நீக்கம் செய்யப்பட்டது உட்கட்சி விவகாரம் என தெரிவித்தார். நிறைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர ஆவலில் உள்ளனர் என்றும், திரிஷா விவகாரத்தில் பெண்களைப் பற்றி பேசக்கூடாது என்பதனை கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“யார் முதலமைச்சர் என்பதை தீர்மானிப்பது பொதுமக்கள் தான், ஸ்டாலின் அல்ல என்றும், “200 இடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்கு வங்கி அரசியலை திமுக அரசு முன்னெடுக்கிறது என்றும் நயினார் குறிப்பிட்டார்.
















