திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருச்சி என்டிஏ பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தை கொள்ளையடித்த திமுக குடும்பத்தை தோற்கடிக்க பொதுமக்கள் முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் அமையவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
















