தருமபுரியில் நடைபெறவுள்ள துணை முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக மாற்று வழியில் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என தகவல் வெளியான நிலையில், இரவு 9 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அரசு கலை கல்லூரி வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு துணை முதலமைச்சர் ரோடு ஷோ நடத்தவுள்ளதாக கூறி போலீசார் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.
திடீரென சாலைகள் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் அழைத்துவரப்பட்ட நிலையில், 500 ரூபாய் கொடுப்பதாக கூறி 200 ரூபாய் மட்டும் திமுகவினர் வழங்கியதாக பெண்கள் குற்றம்சாட்டினார்.
















