சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கீழ்பென்னாத்தூரில் கட்டுமான பணிகள் முடிக்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைபடி, திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் புதிய பேருந்து நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, 3 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் கட்டடம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட நிலையில், புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
கீழ்பென்னாத்தூர் நடந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்தார்.
புதிய பேருந்து நிலையத்தை சுற்றி தார் சாலைகள் அமைக்கவில்லை என்றும், பேருந்து நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அவசர கதியில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளனர்.
















