அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை அறிவித்துள்ளது.
ஏடன் வளைகுடா பகுதியில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தத் தாக்குதல் முயற்சியை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக முறியடித்ததாகவும், போர்க்கப்பலுக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டதாகப் பரவும் தகவல்கள் உண்மையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















