போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 2 LPG கப்பல்கள் இந்தியா புறப்பட்டுள்ளன…
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்ட நிலையில் ஈரான் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதுகுறித்து பேட்டியளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி, இந்திய கப்பல்கள் எப்போதும் நட்பு நாடுகளின் கப்பல்களாகவே கருதப்படுகின்றன எனவும் அவை எவ்வித தடையுமின்றி பாதுகாப்பாக பயணிக்க முழு உரிமை உண்டு எனவும் தெரிவித்தார்.
அதன்படி சிவாலிக், நந்தா தேவி ஆகிய 2 LPG டேங்கர் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கி இருப்பது மத்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்கு பலனாக அமைந்துள்ளது…
















