ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ? - சிறப்பு கட்டுரை!
Mar 19, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ? – சிறப்பு கட்டுரை!

Manikandan by Manikandan
Mar 16, 2026, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் போர் காரணமாக உலக அளவில் எரிசக்தி விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு வருவதற்கு முன்பே வீட்டு உபயோக LPG கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தேவைகளுக்கு இறக்குமதியையே இந்தியா நம்பியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலும், அதற்கடுத்த நிலையில், ஈராக் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவருகிறது. மேலும், சுமார் நாற்பது நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடங்கியதும் கடலில் உள்ள ரஷ்ய கப்பல்களில் இருந்த 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணையை இந்தியா கொள்முதல் செய்துள்ளது.

இதனால் தேவைக்கதிகமான கச்சா எண்ணெய் இந்தியாவிடம் உள்ளது. ஏற்கெனவே படூர், மங்களூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் பெரிய அளவிலான நிலத்தடி எண்ணெய் கிடங்குகளில் கச்சா எண்ணெயை இந்தியா சேமித்து வைத்துள்ளது.

இது மட்டுமில்லாமல் அதிக அடர்த்தியுள்ள கச்சா எண்ணெயை தூய்மை படுத்தும் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தியாவில் அதிகம் உள்ளது. எனவே பெட்ரோல், டீசலுக்கு இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படவில்லை.

ஆனால், LPG கேஸ் சிலிண்டர் விஷயத்தில் இந்தியாவின் நிலை வேறுவிதமாக உள்ளது. 2010ம் ஆண்டு 10.6 கோடி மக்கள் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளராக இருந்தனர்.

2014ம் ஆண்டு நாட்டின் பிரதமராக முதல் முறையாக பதவியேற்ற உடனேயே மோடி கொண்டுவந்த பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான கிராமப்புற வீடுகளில் LPG கேஸ் இணைப்பு வந்தது.

அதன் காரணமாக LPG வாடிக்கையாளர் எண்ணிக்கை 2014-ல் 14.5 கோடியாகவும் 2018-ல் 22.4 கோடியாகவும் உயர்ந்தது. தற்போது இந்தியாவில் 33 கோடி LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

ஓராண்டுக்கு 31 மில்லியன் டன் எரிபொருள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படுகிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்,குவைத்,மற்றும் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்துதான் எரிபொருளை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் 90 சதவீத எரிபொருள் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது.

போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள நிலையில் இந்தியாவுக்கு வரவேண்டிய எரிபொருள் வரத்து தடைபட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் எல்பிஜி சேமிப்புக்கான கிடங்குகள் மங்களூரு மற்றும் விசாகப்பட்டினத்தில் மட்டுமே உள்ளன. இந்த இரண்டு கிடங்குகளில் சேமிக்கும் 1.4 லட்சம் டன்கள் எரிபொருள் இரண்டு நாட்களுக்கும் குறைவான நுகர்வுக்கு மட்டுமே வரும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

4 பில்லியன் கன மீட்டர் வரையிலான ஆரம்ப நிலத்தடி எரிவாயு சேமிப்பு திறன் கொண்ட கிடங்குகள் ஏற்படுத்த 2 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திட்ட ஒப்புதலுக்குப் பிறகு இதைக் கட்டிமுடிக்க சுமார் 4 ஆண்டுகள் ஆகும் என்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விறகு,மண்ணெண்ணெய் மற்றும் பயோகேஸ் எரிவாயுவிலிருந்து LPGக்கு இந்தியா மாறியது மிகப் பெரிய பொது சுகாதார வெற்றியாகும்.

அதற்கேற்ப இந்தியாவின் எரிவாயு அமைப்பு, இருப்பு வைப்பதற்கு பதிலாக தொடர்ச்சியான விநியோகத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள LPG விநியோகம் தடையில்லாமல் மக்களுக்குக் கிடைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் கச்சா எண்ணெயிலிருந்து LPG உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளன.

வணிக பயன்பாட்டை விடவும், வீட்டு நுகர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் வளைகுடா நாடுகளுக்கு வெளியே அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதியை அதிகப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

ShareTweetSendShare
Previous Post

இந்தியா வருகிறது ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்!

Next Post

 கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை : முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் – சிறப்பு கட்டுரை!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies