நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த நிலையில் இருந்த காருக்குள் 4 பேர் உடல் கருகிய நிலையில் சடலம் கண்டெுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பெட்டைகுளத்தில் இருந்து கல்லுவிளை செல்லும் சாலையில் பனங்காடு என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கு கார் ஒன்று எரிந்து நிற்பதைக் கண்ட, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காருக்குள் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேரின் உடல்கள் எரிந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் என கூறப்படும் நிலையில், மர்ம நபர்கள் காரோடு கடத்தி வந்து தீ வைத்துக் கொன்றார்களா? அல்லது இரவு நேரத்தில் காரை நிறுத்திவிட்டு உள்ளே தூங்கியபோது, மின்கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்ததில் உயிரிழந்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















