தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, தமிழகத்தில் இண்டி கூட்டணியிலிருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி விசிக, சிபிஐ மற்றும் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்டு திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அந்த கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்து, 17 தொகுதிகளில் தனியாக போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஆசைத்தம்பி அறிவித்துள்ளார்.
மேலும், தென்காசி, தூத்துக்குடி, சிவகாசி, ராமநாதபுரம், வேலூர், ஏற்காடு வீரபாண்டி உள்ளிட்ட 17 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும், மற்ற தொகுதிகளில் இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் லெனினிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள அன்பு என்பவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருப்பது திமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
















