வீட்டு உபயோக சிலிண்டர்களை பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் புதிதாக கொண்டுவரப்பட்டது அல்ல என தெளிவுப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயல்முறை நுகர்வோர் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை முடிக்க ஊக்குவிப்பதற்காக மேற்கொண்டு வரும் முயற்சி என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை e-KYC முடிக்காத LPG நுகர்வோருக்கு மட்டுமே இந்த புதிய உத்தரவு பொருந்தும் என்றும், உஜ்வலா அல்லாத வாடிக்கையாளர்கள் ஏற்கனவே e-KYC செய்திருந்தால் மீண்டும் செய்யத் தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் eKYC-ஐ வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலமாக எளிதாகவும்,
இலவசமாகவும் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
















