மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றம் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதிலுக்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவது குறித்தும் தலைவர்கள் இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
















