ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், அதிபர் ட்ரம்ப் கோபமடைந்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் தங்கள் அனுமதி இல்லாமல் எந்த கப்பலும் செல்லக்கூடாது என ஈரான் அறிவுறுத்தியுள்ளது. மீறினால் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்புமாறு சீனா, ஜப்பான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை, நாங்களே பார்த்து கொள்கிறோம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா உதவியது போல், அவர்கள் அமெரிக்காவுக்கு உதவவில்லை என்றும் ட்ரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.
















