கேஸ் சிலிண்டர்களை கேட்டு, விநியோக மையங்களுக்கு நுகர்வோர் நேரில் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, எல்பிஜி விநியோகம் இன்னும் கவலைக்குரியதாகவே இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக கேஸ் சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் கூறினார்.
தற்போதுள்ள சூழலில், கிட்டத்தட்ட 93 சதவீதம் பேர் ஆன்லைன் வாயிலாகவே முன்பதிவு செய்வதாகவும், பல்வேறு கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார். ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்துள்ளவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், உங்களுக்கான காஸ் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வந்து வினியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
















