பாகிஸ்தான் ராணுவத்திற்கும், அந்நாட்டின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அசிம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவத்திற்கும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு கடந்த சில மாதங்களாகவே பலவீனமடைந்துள்ளது.
பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்புகள் நடத்திய தொடர் தாக்குதல்களைக் கண்டறிய ஐஎஸ்ஐ தவறியதால், பாகிஸ்தான் ராணுவத்தில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தின் நகர்வுகள் குறித்தும் ஐஎஸ்ஐ எந்த முன்னெச்சரிக்கையையும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பில் ஒரு பெரிய மறுசீரமைப்புக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, உளவு அமைப்புகள் தங்கள் செயல்திறனை அதிகரிக்க வேண்டும் என்று எச்சரித்து, ஒரு உறுதியான நிலைப்பாட்டை அசிம் முனீர் எடுத்துள்ளார். சமீபத்தில் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயின் உயரதிகாரிகளுடன் நடந்த ஒரு சந்திப்பில், நேரடியாக இவ்வாறு அசீம் முனீர் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
















