அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடனான போருக்கு மத்தியில், ஈரான் நாளொன்றுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதல் 20 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது. இரு நாடுகள் மீதும் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் சர்வதேச கடல் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியையும் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்த வழித்தடம் மூடப்பட்டதால் உலகளவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்தி ஈரான் தனது கஜானாவை நிரப்பி வருவதாக கூறப்படுகிறது.
அதாவது, இதற்கு முன் அமெரிக்காவின் தடைகளால் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய முடியாமல் இருந்த ஈரான் தற்போது விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு இந்திய மதிப்பில் ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
கேப்லர் தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின்படி போருக்கிடையே சுமார் 2.4 கோடி பேரல் கச்சா எண்ணெய், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கடந்து சென்றுள்ளது. போர்ச்சூழலுக்கு மத்தியில் பொருளாதார ரீதியாகவும் ஈரான் பலமடைந்து வருவது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
















