இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியில் முடிந்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியப்பெருங்கடலில் அமெரிக்கா- பிரிட்டன் நாடுகளின் கூட்டு கடற்படை தளம் டீகோ கார்சியா தீவில் அமைந்துள்ளது. இந்த கடற்படை தளம் ஈரானில் இருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்நிலையில், இந்த கடற்படை தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் முயற்சியில் இறங்கியது. அதில், ஒரு ஏவுகணை பறந்து கொண்டிருக்கும் போதே தொழில்நுட்பக் கோளாறால் செயலிழந்ததாகவும், மற்றொரு ஏவுகணையை அமெரிக்கக் கடற்படை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
ஈரானின் இந்தத் தாக்குதல் முயற்சி அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இந்நிலையில், டியேகோ கார்சியா மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















