சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கண்டறிவது மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்தும் அர்ச்சனா பட்நாயக் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இந்த கூட்டத்தில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
















