சேலத்தில் திருமணமான இளைஞரின் பாலியல் தொந்தரவு காரணமாக, வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்த சிறுமிக்கு, 32 வயதாகும் சதீஷ் என்பவர், பாலியல் தொந்தரவு கொடுத்து சித்ரவதை செய்துள்ளார்.
தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சதீஷுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே, பாலியல் தொந்தரவால் அவமானம் தாங்க முடியாமல் மன வேதனை அடைந்த மாணவி, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சதீஷை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, சதீஷை பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த நிலையில், அவர் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
















