சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கண்டித்து காங்கிரஸ் எத்தனை போராட்டம் நடத்தியது எனக் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், செல்வப்பெருந்தகை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள சத்தியமூர்த்தி பவனில், செல்வப்பெருந்தகை முன்னிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜன், காங்கிரஸில் இணைந்தார். அப்போது பேசிய அவர், தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் சமூக அவலங்களை மாற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரஸில் இணைந்தாக கூறினார்.
அப்போது, சட்டம் – ஒழுங்கிற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் எத்தனை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு செல்வப்பெருந்தகை, உடனடியாக பதிலளிக்க முற்பட்டு, செய்தியாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், கேள்வி எழுப்பிய செய்தியாளரை பார்த்து ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவா என கேள்வி எழுப்பியதால் இருவருக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
















