புதுக்கோட்டை தொகுதியில் பயன்படுத்தப்படக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் விவிபேட் ஆகியவை தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரத்து 681 வாக்குப்பதிவு மையங்கள் உள்ள நிலையில், 6 ஆயிரத்து 375 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள், விவிபேட் ஆகியவை கொண்டுவரப்பட்டன.
பின்னர், ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் இருந்து கன்டெய்னர் லாரிகள் மூலமாக அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.
அதன்படி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 295 வாக்குப்பதிவு மையங்களுக்கு பயன்படுத்தக்கூடிய 354 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 354 கண்ட்ரோல் யூனிட்டுகள், 383 விவிபேட் கருவிகள் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்து.
திருச்சி மாவட்டம், முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முசிறி தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 கண்டெய்னர் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்ட நிலையில், அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்த நிலையில்,24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















