மத்திய கிழக்கிற்கு மேலும் 1,000 வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஈரானுடன் போர் நிறுத்தம் தொடர்பாக 15 அம்சங்களுடன் கூடிய அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடங்கிய குழு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் மேலும் 1,000 வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
















