பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வை தடுக்கும் வகையில், கலால் வரியானது லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயில் இருந்து, மூன்று ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டீசல் மீதான கலால் வரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் வகையில் வரி குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில், இந்தியாவில் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மக்கள் மீது சுமையை ஏற்றாமல் கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு தடுத்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் பெட்ரோல் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, இதுவரை ஒட்டுமொத்தமாக 95 நாடுகளில் பெட்ரோல் விலை ஏற்றம் கண்டுள்ளது.
மேற்காசிய போருக்கு பிறகு பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கம்போடியாவில் 68 சதவீதமும், வியட்நாமில் 50 சதவீதமும், நைஜீரியாவில் 35 சதவீதமும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
30 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக எரிபொருள் விலையை தென்கொரியா உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் பிப்ரவரி 28-ம் தேதி முதல் இன்று வரை பெட்ரோல், டீசல் விலை உயராமல் ஒரே விலையே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
















