பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தலைமை செயலகம் சென்ற அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து அது குறித்து புகார் அளித்தார்.
தவெக தலைவர் விஜய் வரும் சட்டப்பேரவை தேர்தலில் சென்னையிலுள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், பெரம்பூர் தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தலைமை செயலகம் சென்ற விஜய், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக புகார் மனு அளித்தார். அத்துடன் அந்த மனுவில், அதிகாரிகள் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், ஏடிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட 10 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் விஜய் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
















