கேரளத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கேரளம் மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு பாஜகவினர் நினைவு பரிசினை வழங்கினர். மேலும் மேடையில் பிரதமர் மோடி செண்டை மேளம் வாசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கேரளத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டதாக தெரிவித்தார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கேரளத்தில் ஆதரவு அலை வீசுவதாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கேரளத்தின் திருச்சூர் பகுதியில் சாலைப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், சாலையின் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, பிரதமரின் திறந்தவெளி வாகனத்தில் இடம்பெற்றார். தன்னை வரவேற்க காத்திருந்த மக்களை நோக்கி கையசைத்த மோடி மீது மலர்களை தூவி தங்கள் அன்பை தொண்டர்கள் வெளிப்படுத்தினர்.
















