திண்டுக்கல்லில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விருது வழங்கும் விழாவை ஒரு கும்பல் நடத்தியது.
இணையதள பிரபலங்களுக்கு சிறப்பு விருந்து மற்றும் பண பலன்கள் தருவதாக அந்தக் கும்பல் அறிவித்திருந்த நிலையில், எதுவும் செய்யாததால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் விழா ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் விழா நடத்தியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















