தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, 4ஆம் தேதி மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, தங்கள் தொகுதிகளில் பரப்புரையை ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி சென்னை வர உள்ளார்.
ஏப்ரல் 3ஆம் தேதி புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அன்றைய தினமே சென்னை வரும் பிரதமர் மோடி, 4ஆம் தேதி சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதே நாளில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் ரோடு ஷோ செல்லும் அவர், அங்கு போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல் முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருவதால் பாஜகவினரும், கூட்டணிக் கட்சியினரும் உற்சாகமம் அடைந்துள்ளனர்.
















