திருப்பரங்குன்றம் பிரச்னையை திமுகதான் பெரிதாக்கியதாக, தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்ய விஜய் கண்டிப்பாக வருவார் என தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் போதுமான காவல்துறை இல்லை என்றும், மைக், ஸ்பீக்கர் பயன்படுத்த விஜய்க்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
காவல்துறை திமுகவுக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
















