தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 23 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது.
தமிழகத்தில் 166 வாக்குச்சாவடிகளும், புதுச்சேரியில் 2 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 168 வாக்குச்சாவடிகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
143 பேர் போட்டியிட்ட இத்தேர்தலில், முதன்முறையாக க்யூ-ஆர் கோடு முறையில் வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.
வழக்கறிஞராக பதிவு செய்துள்ள பாஜக மாநில துணை தலைவர் பால் கனகராஜ், பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
பார்கவுன்சில் தேர்தலில் மொத்தம் 81 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகளை எண்ணும் பணி, வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















