மகா வீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அண்ணாசாலையில் அமைந்துள்ள ஜெயின் கோவிலில் இருந்து ஜெயின் சமூகத்தினர் பாரம்பரிய மரபின்படி மகாவீர் சாமியின் சிலையை அலங்கரித்து, பக்தி உணர்வுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் பெண்கள், இளைஞர்கள், சிறார்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி, கோஷங்கள் எழுப்பி ஆன்மீக உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட வள்ளலார் சாலையில் உள்ள வெங்கட்ட நகர் பகுதியை வந்தடைந்தது.
அப்போது, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் நேரில் கலந்து கொண்டு ஜெயின் சமூகத்தினரை உற்சாகமாக வரவேற்றார்.
மேலும், மகாவீர் சாமியின் உபதேசங்கள் உலக சமாதானத்திற்கும், அஹிம்சை கொள்கைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை குறிப்பிட்டு, மகா வீர் ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தார்.
















