ஜெய்ப்பூரில் புகைப்படம் எடுப்பதற்காக யானைக்கு Pink நிறம் பூசிய வெளிநாட்டு கலைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா. இவர் தனது கலைப் படைப்பை எடுப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வருகை வந்துள்ளார். இந்நிலையில் ஜெய்ப்பூரின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றான யானையை, அந்த நகரின் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தில் காட்ட வேண்டும் என ஜூலியா விரும்பினார். அதன்படி யானையின் உடல் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்டது. மேலும், வர்ணம் பூசப்பட்ட மாடல் அழகி ஒருவரை யானையின் மீது அமரவைத்து புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
அழகிற்காக ஒரு வாயில்லா ஜீவனை வர்ணம் பூசி காட்சிப்படுத்துவது விலங்கு வதை எனவும் யானைகளின் தோல் மிகவும் மென்மையானது மற்றும் நுண்துளைகள் கொண்டது எனவும், அதன் மீது ரசாயனங்கள் அல்லது அதிகப்படியான வண்ணங்களை பூசுவது அதன் ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஜூலியா, யானைக்குப் பூசப்பட்டது முற்றிலும் இயற்கையான, நச்சுத்தன்மையற்ற வண்ணம் எனவும் இதனால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
















