கோவாவில் பாராசெயிலிங் செய்தபோது கயிறு அறுந்து சுற்றுலா பயணி கடலில் விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.
கோவாவின் பிரபல கடற்கரை ஒன்றில், சுற்றுலா பயணி ஒருவர் பாராசெயிலிங் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
பாராசூட் மூலம் வானத்தில் உயரே பறந்து கொண்டிருந்தபோது, படகுடன் இணைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கயிறு எதிர்பாராதவிதமாக பாதியிலேயே அறுந்தது. பாராசூட் நிலைதடுமாறிய நிலையில் சுமார் 50 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து சுற்றுலாப் பயணி கடலில் விழுந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த மீட்புக்குழுவினர் மற்றும் படகோட்டிகள் விரைந்து சென்று அவரைப் பாதுகாப்பாக மீட்டனர். நல்வாய்ப்பாக பெரிய காயங்கள் ஏதுமின்றி அந்த சுற்றுலா பயணி உயிர்தப்பினார்.
















