சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து விழாவின் சிகர நாளில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடை தாயாருடன் புஷ்பவனேஷ்வரரும், சிறிய தேரில் அம்மனும் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்தனர்.
வழிநெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
















