திமுக அரசு கடந்த ஓராண்டில் ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளியதாக அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் போட்டியிடுகிறார். இதையொட்டி தாமரைக்குளம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் தேர்தல் அறிக்கையை வைத்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனது பரப்புரையை தொடங்கினார்.
அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டு வீடு வீடாக சென்று தேர்தல் அறிக்கையை கொடுத்து வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து பரப்புரையின்போது பேசிய தளவாய் சுந்தரம், திமுக அரசு கடந்த ஓராண்டில் ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளியதாக குற்றம்சாட்டினார்.
















