அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இந்த மோதலின் தற்போதைய போக்கைக் கண்டு தான் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஈரான் தரப்பு ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புகிறது என்றும், தன்னை விட அவர்கள் தான் இதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். என்றும் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் கூறினார்.
தற்போதைய ஈரான் தலைமை மிகவும் நிதானமாகவும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் செயல்படுவதாகக் குறிப்பிட்ட டிரம்ப், ராஜதந்திர ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டால் இன்னும் விரைவாகவே போர் முடிவடையும் என்றார்.
















