தேர்தல் சமயத்தில் மட்டுமல்லாமல் அனைத்து நேரங்களிலும் மக்களுடன் துணைநிற்பவர்களுக்குதான் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர், கீழப்பழுவஞ்சி, பெருமாநாடு, குமரமலை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
















