முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
May 2, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2026, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடந்த 23ம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரம் இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அதிகாலை முதலே மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றவும், முருகனின் அருளைப் பெறவும் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி ஏந்தி, “அரோகரா” கோஷத்துடன் திருப்பரங்குன்றம் மலை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். .

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் காப்பு கட்டி விரதமிருந்து ஏராளமான பக்தர்கள் பறவை காவடி, புஷ்ப காவடி, வேல் காவடி எடுத்து வழிபட்டனர். மேலும், பக்தி கோஷங்கள் முழங்க பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் பரிமளரெங்கநாதர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியையொட்டி பரிமளரெங்கநாதர் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள மதுரை காளியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் தலை அலங்காரம் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொட்டியத்தில் உள்ள புகழ்பெற்ற மதுரை காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரை கட்டமைக்கும் திருத்தேர் ‘தலை அலங்காரம்’ நடைபெற்றது.

அப்போது, சாரம் அமைத்து தேரின் தலைப்பகுதியை மேலே கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பினர். நாளை மாலை திருத்தேர் புறப்பாடு நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: Subramaniya Swamy Temple iThiruparankundram temple.arupadai veeduPanguni Uthiram
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

Next Post

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு!

Related News

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

குன்றக்குடி அடிகளார் 31-வது குருபூஜை விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சித்ரா பௌர்ணமி கோலாகலம் – திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பால் கனகராஜ் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – பியூஸ் கோயல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies