திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளதாக தெரிவித்தார். திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுக குடும்பத்திற்கு நாகரிக அரசியல் தெரியாது என கூறிய அவர், ஊழல் ஆட்சிதான் திமுகவுக்கு தெரியும் என விமர்சித்தார்.
சட்டப்பேரவை தேர்தல் ஸ்டாலின் குடும்பத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் என்றும் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்தார்.
















