புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், 89 புள்ளி 83 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
லாஸ்பேட்டை வாக்குச்சாவடிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி வந்த முதல்வர் ரங்கசாமி, அங்கு தனது வாக்கினை பதிவு செய்தார். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும், 89 புள்ளி 83 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















