உதயநிதியை முதலமைச்சராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிகளை செலவழிக்கிறது என்றும், ஆனால், மக்கள் தாமரை சின்னத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அவர், முறம்பு வண்டி பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் திறந்த வாகனத்தில் பரப்புரையை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு திமுக எந்த நன்மை செய்யவில்லை என்றும், போதைப்பொருள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து காணப்பட்டது எனவும் குற்றம்சாட்டினார்.
உதயநிதியை முதலமைச்சராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிகளை செலவழிக்கிறது என்றும், ஆனால், மக்கள் தாமரை சின்னத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் எனவும் கூறினார்.
மேலும், சாத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.
















